காமிகா ஏகாதசி, ஜூலை 19, 2017
ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு காமிகா ஏகாதசி எனப் பெயர். இது கொடிய பாபங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி. இதன் மகிமையை நாரதருக்கு பிரம்ம வைவர்த்த புராணத்தில் பிரம்மா எடுத்து சொல்லும் போது ,காமிகா ஏகாதசி விரதம் ஒரு பிராமணனை கொன்ற பாபத்திலிருந்து கூட விடுவிக்கும் எனக் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு இந்த ஏகாதசியின் மகிமை பற்றி எடுத்து சொல்லும் போதும் இதையே கூறுகிறார்.
காமிகா ஏகாதசிக்கு ஸ்ராவண கிருஷ்ண ஏகாதசி எனவும் பெயருண்டு.
காமிகா ஏகாதசியை பற்றிய கதை
ஒரு காலத்தில் ஒரு பண்ணையார் பிராமணர் ஒருவரை சண்டையின் போது தவறுதலாக கொன்று விடுகிறார். தனது தவறை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தமாக அந்த பிராமணரின் இறுதி சடங்கின் செலவை ஏற்றுக்கொள்ள நினைத்தார்.வெகுண்ட ஊர் மக்கள் அவரை விரட்டினர்.
மனது வருத்தமடைந்த பண்ணையார் ஒரு சன்யாசியை அணுகி தனது வருத்தத்தை தெரிவித்தார். அவரும் காமிகா ஏகாதசி விரதத்தை பற்றி கூறி அது எந்தவிதமான பாபத்தையும் நீக்கும் எனக் கூறினார். பண்ணையாரும் அதே மாதிரி விரதமிருந்து விஷ்ணுவின் சிலையருகேயே தூங்கினார். அந்த இரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஹரி அவரின் பிரம்மஹத்தி பாபம் தொலைந்தது எனக் கூறினார். பண்ணையார் காமிகா ஏகாதசி விரதமிருந்ததே காரணம் எனவும் உரைத்தார்.
காமிகா ஏகாதசி விரத பலன்கள்
· குதிரை தானம் அல்லது அஸ்வமேத யாகம் செய்த பலன் காமிகா ஏகாதசியை பற்றி கேட்போருக்கு உண்டு.
காமிகா ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும்,நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம்.
சாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக காமிகா ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.
இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம்.
குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம்.
வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது .
இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.
ஒரு பசுவை அதன் கன்றோடு,அவை உண்ண தேவையான உணவோடு கொடுப்பதற்கு சமம்.
காமிகா ஏகாதசி விரத பலனால் ஒருவர் பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.
இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம்.முந்தைய ஜென்மங்களின் பாப சுமையிலிருந்து விடுபடலாம்.
காமிகா ஏகாதசி விரதமிருப்போரை யமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள்.
காமிகா ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதால் உண்டாகும் பலன்
காமிகா ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.
இன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் ஒருவரின் மூதாதையர்கள் சுவர்க்கத்திற்கு முன்னேறுவார்கள்.
காமிகா ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாபங்களில் இருந்து விடுபடுவார்கள்.
காமிகா ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும்,கந்தர்வர்களும்,பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள்.
இந்த ஏகாதசி அன்று இரவு கண் விழித்து ஹரி பஜன் செய்தால் முக்தி நிச்சயம்.
இவ்வளவு எளிதாக வைகுண்டம் சேர முடியும் என்றால் முயற்சி செய்வதில் தப்பென்ன?
· .
·
·
·
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply