அசுர குல மன்னனாம் ஹிரண்யகசிபுவை அழிக்க ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மராக அவதரித்த நாளே நரசிம்ம ஜெயந்தி. இந்த நாளில் தசாவதாரத்தில் ஒருவரான நரசிம்மர் தீயதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தார்.
நரசிம்மர் பிரகலாதனின் தந்தையாம் ஹிரண்யகசிபுவை அழிக்க தோன்றியவர். ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் வரம் வாங்கிய அசுரன். எந்தவொரு மனிதனாலோ, மிருகத்தாலோ, வீட்டின் வெளியிலோ, உள்ளேயோ, எந்ததொரு ஆயுதத்தாலோ, பகலிலோ அல்லது இரவிலோ அழிக்கப்பட முடியாத வரம் வாங்கியவன்.
இந்த வரத்தோடு பூமியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தான் ஹிரண்யகசிபு. எல்லோரும் தன்னை கடவுளாக வணங்க ஆணை பிறப்பித்தான். அதன் வழி செல்லாதவர்களை துன்புறுத்தினான். ஆனால் தனது மகன் பிரகலாதனை தனது வசம் வைக்க முடியவில்லை அவனால். ப்ரகலாதன் தனது தாயின் கர்ப்பத்திலேயே விஷ்ணுவின் மகிமையை அறிந்தவன். விஷ்ணு பக்தியில் சிறந்தவன்.
ஹிரன்யகசிபுவும் பிரகலாதனை கொல்ல பல வழிகளில் முயன்றான். மலையிலிருந்து உருட்டினான், விஷம் கொடுத்து கொல்ல பார்த்தான், தீயில் எரிக்க பார்த்தான். எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்காமல், பிரகலாதனை இழுத்து வந்து ஒரு தூணின் முன் நிறுத்தி அந்த தூணுக்குள் விஷ்ணு இருக்கிறாரா எனக் கேட்ட போது பிரகலாதனும் ஆம் என உரைத்தான்.
கோபம் கொண்ட ஹிரண்யகசிபு அந்த தூணை தனது கதையால் பிளக்க, அந்த தூணிலிருந்து வெளி வந்தார் நரசிம்ம அவதாரமெடுத்த மகாவிஷ்ணு. பாதி சிங்கமாகவும் பாதி மனிதனாகவும் உருவம் கொண்ட அவர், கர்ச்சனையோடு, ஹிரண்யகசிபுவை பிடித்து வாசல் படிக்கட்டில், தனது மடியில் இருத்திக் கொண்டார்.
வேளையோ சாயங்காலம்.பகலும் அல்ல, இரவும் அல்ல. தனது கூரிய நகங்களால் ஹிரண்யகசிபுவை கிழித்து எறிந்தார். இவ்வாறாக நரசிம்மர் மனிதனாகவும், மிருகமாகவும் இல்லாமல், ஆயுதம் இல்லாமல், வீட்டிற்கு உள்ளும் புறமும் இல்லாமல் ஹிரண்யகசிபுவை அழித்தார். அவரது கோபத்தை பிரகலாதனாலேயே தணிக்க முடிந்தது.
நரசிம்ம அவதாரம் உலகில் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்ட நாராயணனால் எடுக்கப்பட்டது. ஹிரண்யகசிபுவின் வதம் இதனையே குறிக்கிறது. நாராயணன் தனது பக்தர்களை கைவிடமாட்டார் என்பதையும் இது காட்டுகிறது.
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருப்போர் ஏகாதசி விரத முறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு போது உணவு உண்ணுபவர்கள் அரிசி மற்றும் தானியங்களால் ஆன உணவை ஒதுக்க வேண்டும்.
இன்று அன்ன தானம் செய்வது சிறந்தது. ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுப்பது நல்லது.
நரசிம்மர் கோவிலுக்கு சென்று பக்தர்கள் நரசிம்மரை வழிபடுகிறார்கள்.
இன்று பாகவத்தில் நரசிம்ம புராணத்தை படிப்பது புண்ணியத்தைக் கொடுக்கும்.
நரசிம்மரை வழிபட்டு நன்மையை தேடி பாபங்களை தொலைப்போம்.
நரசிம்ம ஜெயந்தி அன்று வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதம் நிச்சயம்.
நாங்கள் எல்லாவிதமான ஹோம சேவைகளையும் வழங்குகிறோம். நீங்கள் இணைய தளம் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். எங்கள் புரோஹிதர் சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள எங்களை அணுகுங்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply