பிரபோதினி ஏகாதசி அளிக்கும் அரிய ஆன்மீக பலன்கள் | Ama Vedic Services
அக்டோபர் 30, 2017 12:00 பிப

பிரபோதினி ஏகாதசி அளிக்கும் அரிய ஆன்மீக பலன்கள்

பிரபோதினி ஏகாதசி, அக்டோபர் 31, 2017

 

பிரபோதினி ஏகாதசி ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசி ஆகும். இதற்கு தேவோத்தான ஏகாதசி, ஹரிபோதினி ஏகாதசி என்று பெயர் உண்டு. பிரபோதினி ஏகாதசி சாதுர்மாஸ்யத்தின் முடிவைக் குறிக்கிறது.

Prabodhini Ekadshi

சாதுர்மாஸ்யம் என்றால் நான்கு மாதங்கள் என்று பொருள். பகவான் விஷ்ணு ஆடி மாத ஏகாதசியாம் தேவசயன ஏகாதசி அன்று உறங்க ஆரம்பித்து நான்கு மாதங்கள் உறங்கிய பின் பிரபோதினி ஏகாதசி அன்று கண் விழிக்கிறார்.

 

பிரபோதினி என்றால் ‘கண் முழிக்கும் 11வது நாள்’ எனப் பொருள்படும் இந்த ஏகாதசிக்கு விஷ்ணு பிரபோதினி எனவும் பெயர் உண்டு.

 

சாதுர்மாஸ்ய சமயத்தில்  திருமணங்கள் நடைபெறுவதில்லை. ஹரிபோதினி ஏகாதசி சுப நிகழ்சிகளின் ஆரம்பங்களைக் குறிக்கிறது. விஷ்ணு தனது உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறார் அல்லவா?

 

பிரபோதினி ஏகாதசியின் மகிமையை பிரம்மா நாரதருக்கு கூறி உள்ளார்

 

பிரபோதினி ஏகாதசியின் பின்னணிக் கதை

 

மகாவிஷ்ணு நீண்ட நாட்கள் உறங்கும் வழக்கம் உடையவர். அவர் உறங்கும் வேளையில் அவருக்காக கடவுளர்களும்,தேவர்களும் காத்து இருக்க வேண்டி இருந்தது. அவர் உறங்கக் காத்திருந்த அசுரர்கள் அண்டத்தில் பல விதமான் இன்னல்களை விளைவித்தார்கள். தேவர்களும்,மனிதர்களும் கடும் துன்பத்திற்கு ஆளானார்கள்.

 

அன்னை மகாலட்சுமிக்கு விஷ்ணுவின் நீண்ட நாள் தூங்கும் பழக்கம் அதிருப்தியை தந்தது.இதனால் அண்டத்தில் பல வித உபாதைகள் தொடர்ந்தன.அதனால் அன்னை பிரபுவின் தூங்கும் நேரத்தை மாற்றிக்க கொள்ளக் கோரினாள்.

 

இந்த வேளையில் அசுரன் ஒருவன் வேதங்களை திருடி மனிதர்கள் வேதங்களைப்  பற்றி அறிந்து பயன் பெற விடாமல் செய்தான். உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவின்  துயில் கலையும்  வரை காத்திருந்த தேவர்கள் அவரிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனோடு போரிட்டு வேதங்களை மீட்டார் .

 

 தனது நீண்ட நாள் தூக்கத்தின் விளைவாக தேவர்களும்,மனிதர்களும் இன்னல்படுவதை உணர்ந்த எம்பெருமான் தான் உறங்கும் வேளைகளை  மாற்றிக் கொண்டார். நான்கு மாதங்கள் மட்டும்  உறங்க ஆரம்பித்தார். ஆஷாட ஏகாதசியாம் தேவ சயன ஏகாதசியில் அன்று  உறங்க ஆரம்பித்து, பிரபோதினி ஏகாதசி அன்று விழித்துக் கொள்கிறார். இதுவே பிரபோதினி ஏகாதசியின் சிறப்பு ஆகும்.

 

பிரபோதினி ஏகாதசி விரத முறை

 

பிரபோதினி ஏகாதசி விரதம்  மற்ற ஏகாதசி விரதங்களைப் போன்றதுதான்.

 

இன்றைய தினம் மாதா  துளசி பெருமாளை மணந்த  நாள் ஆகும். துளசி இலையை பெருமாளுக்கு மணம் முடித்து ஸ்ரீஹரியின் அருளுக்குப் பாத்திரமாவர்கள். இவர்களுக்கு  குழந்தைப் பேறு  கிடைப்பதும் உறுதி.

 

இந்த நாளில் சாளக்ராமத்தை பூசிப்பது மிகவும் விசேஷமானது.

 

இந்த நாளில்  தனது  வீட்டு உணவையே உண்ண வேண்டும்.

 

மஞ்சள் நிறமுடைய மலர்களால் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.

 

பிரபோதினி ஏகாதசியின் விரத பலன்கள்

 

பிரபோதினி ஏகாதசி விரதமிருந்தால் ஒருவரின் ஆயிரம் முந்தைய பிறவிகளின் பாபங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

 

10௦௦ அஸ்வமேத யாகங்கள் ,1௦௦ ராஜசூய யாகங்கள் செய்த பலனை விட அதிகமான  பலன் கிடைக்கும்.

 

கங்கை போன்ற புனித நதிகளில் நீராடியதை விட அதிகமான பலன் கிடைக்கும்.

 

குதிரை,பசு,வளமான நிலம், தங்கம் ஆகியவற்றை தானம் கொடுத்த பலனை விடவும் அதிக பலன் கிடைக்கும்.

 

பிரபோதினி ஏகாதசி இரவில் கண் விழித்து ஸ்ரீஹரியை நினைத்து இருந்தால், முந்தைய   10௦௦ பிறவிகளின் பாபங்கள் தொலையும்.

 

இந்த ஏகாதசி மாலையில் விஷ்ணுவிற்கும்,லக்ஷ்மிக்கும் பூஜை செய்வார்கள்.அரிசி,மிளகாய் வற்றல் ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து பின்னர் அவற்றை பிராமணருக்கு தானமாகக் கொடுப்பார்கள்.

 

இந்த ஏகாதசி விரதமிருந்தால் ஒருவரின் மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.நரகத்திலிருந்து மீண்டு வைகுண்ட பதவி அடைவார்கள்.

 

விரதமிருப்போர்க்கு மூவுலகிலும் அரிதான பொருள் கிட்டும்.

 

அவரை யோகி என்றும் ஞானி என்றும் மற்றவர் போற்றுவார்கள்.

 

இன்றைய தினம் விரதமிருந்தால் அது பிரம்மா,விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் விரதமிருந்த பலனைக் கொடுக்கும்.

 

ஹரிபோதினி ஏகாதசியைக் கொண்டாடும் இடங்கள்

 

Prabodhini Ekadashi 2017

பிரபோதினி ஏகாதசியை குஜராத்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

 

குஜராத்தில் கிர்னார் மலையை கிரி வலம் வருகிறார்கள். இந்த கிரி வலம் வர லக்ஷ கணக்கான மக்கள் அங்கு வருகை தருகிறார்கள்.

 

மகாராஷ்ட்ராவின் பண்டரிபுரத்தின் விட்டலக் கடவுளை வணங்க ஏராளமான மக்கள் வருகிறார்கள். இந்த  நேரத்தில் பண்டரிபுரத்தில் 5 நாட்களுக்கு நடக்கும் சர்காரி பூஜை மிகவும் விசேஷமானது.  

 

.ராஜஸ்தானில் புஷ்கர் மேளா நடைபெறுகிறது. இது  பிரம்மாவை போற்றி வணங்கும் முகமாக  நடைபெறுவது.

 

நாமும் பிரபோதினி ஏகாதசி விரதமிருந்து வாழ்வில் ஒப்பில்லா நன்மைகள் அடைவோமாக!

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    13 + 3 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Currently, there is no weather information available.

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK