ஸ்ராவண புத்ரதா ஏகாதசி ஆடி மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசியின் பெயரே அதன் மகிமையை கூறுகிறது. புத்திரன் இல்லாதோர் ஸ்ராவண ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் பெறுவார்கள்.ஆடி மாதத்தில் வரும் ஸ்ராவண ஏகாதசியை போல் பௌஷ்வ புத்ரதா ஏகாதசி (டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வருவது) புத்திர பாக்கியம் தர வல்லது.
ஸ்ராவண ஏகாதசிக்கு பவித்ரோபண ஏகாதசி என்றும் பவித்ர ஏகாதசி என்றும் பெயருண்டு. இந்த ஏகாதசியை வட இந்தியா இல்லாத இடங்களில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பௌஷ்வ புத்ரதா ஏகாதசியை வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
புத்திரன் என்ற வார்த்தை வடமொழியிலிருந்து வந்தது.’பு’ என்னும் வடமொழி எழுத்து நரகத்தை குறிக்கிறது.’திர’ என்றால் நரகத்தில் இருந்து விடுவிப்பவர் என அர்த்தம். புத்திரன் என்பவன் தனது தாய் தந்தையருக்கு உரிய ஈமச் சடங்குகளை செய்து அவர்களை நரகத்தின் பிடியிலிருந்து விடுவித்து முக்தியை தேடித் தருபவன்.
ஸ்ராவண ஏகாதசியின் பின்னணியில் ஒரு கதை உண்டு. இதனை ஸ்ரீ கிருஷ்ணர் தருமருக்கு சொல்லியதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது.
முன்னொரு காலத்தில் மகிஷ்மதி என்ற ராஜ்யத்தை மகிஜித் என்ற ராஜா ஆண்டு வந்தார். அவர் மிகவும் திறமையானவர்,நாணயமானவர். மக்களிடம் அன்பு செலுத்தி அவர்களின் நன்மைக்காக ராஜ்ய பரிபாலனம் செய்தவர். ஆனால் அவருக்கு வாரிசு இல்லை. ஒரு ஆண் வாரிசு பெற வேண்டி அவர் தனது நாட்டில் உள்ள அனைத்து பண்டிதர்களிடமும் சாதுக்களிடமும் ஆலோசனை கேட்டார். அவர்களும் ஒன்று சேர்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தார்கள்.
மன்னனின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டி அந்த பண்டிதர்களும் சாதுக்களும் பல இடங்களுக்கு சென்றார்கள்.முடிவில் மகா முனிவரும் ஞானியுமான லோமேஷ் மகரிஷியை சந்தித்து தங்கள் வணக்கங்களை தெரிவித்தார்கள். தங்களின் தேடுதலை மகரிஷியிடம் அவர்கள் தெரிவித்த போது அவர் தனது ஞான த்ருஷ்டியால் மகிஜித் ராஜாவின் முந்தைய பிறப்பை அறிந்து சொன்னார் .
மகிஜித் முன் பிறவியில் ஒரு வணிகனாகப் பிறந்தார். அவர் ஒரு நாள் நீண்ட பிரயாணத்திற்கு பிறகு, தாக மிகுதியால் ஒரு குளத்தில் நீர் அருந்த சென்றார். அப்போது அங்கு அந்த குளத்தில் ஒரு பசு தனது கன்றோடு நீர் அருந்திக் கொண்டு இருந்தது. அதனை கன்றோடு நீர் அருந்த விடாமல் குளத்தை விட்டு விரட்டினார் வியாபாரி. அவரது நல் வினைகள் காரணமாக அவர் அடுத்த பிறவியில் மன்னனாக பிறந்தார். ஆனால் பசுவையையும் அதன் கன்றையும் நீர் அருந்த விடாமல் துரத்திய காரணத்திற்காக இந்த பிறவியில் அவருக்கு வாரிசு இல்லை.
லோமேஷ் மகரிஷி இதற்கு ஒரு உபாயமும் சொன்னார். ஸ்ராவண புத்ரதா ஏகாதசி விரதம் மன்னர் தனது மனைவியோடு இருக்க வேண்டுமென கூறினார். அது மட்டுமல்லாமல் எல்லா பிரஜைகளும் இந்த நாளில் விரதமிருந்து, அந்த விரத பலனை மன்னருக்கு கொடுத்துவிட்டால் அவருக்கு ஆண் வாரிசு நிச்சயம் பிறக்கும் என்று கூறினார். மன்னர் தனது மனைவியுடன் ஸ்ராவண புத்ரதா ஏகாதசி விரதமிருந்தார். மக்களும் அப்படியே .செய்தனர்.பலனாக மன்னருக்கு ஆண் மகவு வெகு விரைவில் பிறந்தது.
ஸ்ராவண புத்ரதா ஏகாதசி விரதமிருந்தால் ஆண் மகவு பிறக்கும்.குழந்தை இல்லாதவருக்கு இந்த ஏகாதசி விரதம் ஒரு வர பிரசாதமாகும்.
இந்த ஏகாதசி விரதத்தை தம்பதியராக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.நாள் முழுவதும் விரதமிருந்து ,விஷ்ணுவை ஆராதித்து ,அந்த இரவு விஷ்ணுவை ஆராதித்த அறையில் அவரது உருவ பொம்மை இருக்கும் இடத்தருகில் உறங்க வேண்டும்.
இந்த விரத கதையை கேட்பவருக்கும் புத்திர சௌபாக்கியம் உண்டாகும்
மற்ற ஏகாதசிகளை போல் .ஸ்ராவண ஏகாதசி விரதமிருந்தால் பாபங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
இந்த நாளில் பிராமணர்களுக்கு உணவு, உடை, பணம் தானமாக வழங்கினால் நலம்.
ஸ்ராவண புத்ரதா ஏகாதசி அன்று தொடங்கி ஐந்து நாள் உத்சவமாக ஜுலா யாத்ரா பௌர்ணமி வரை நடைபெறுகிறது. இந்த உத்சவத்தின் முடிவில் ஒரு ஊஞ்சலை அலங்கரித்து அதில் சிறிய கிருஷ்ணன் ராதை விக்ரகங்களை வைத்து சிறப்பாக பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
ஸ்ராவண புத்ரதா ஏகாதசி விரதமிருந்தால் புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு புத்திரன் உண்டாகுவான்.முக்தியையும் தேடி கொடுப்பான்.
எங்கள் வைதீக மையம் மூலம் தங்களுக்குத் தேவையான பூஜை, கணபதி ஹோமம், ஆயுஷ ஹோமம், நவக்ராஹா ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply