கார்த்திகை முருகனின் பிறந்த நட்சித்திரமாகக் கருதப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. கார்த்திகை பெண்டிர் முருகனை வளர்த்தமையால் சிவனாரால் பாராட்டப் பெற்று வானில் நட்சத்திரக் கூட்டமாக ஒளிர்கிறார்கள்.
கார்த்திகை 27 நட்சத்திரங்களில் ஒன்று. சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தை மாதந்தோறும் கடக்கும் நாளே கார்த்திகை எனக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்த கதை நாம் அறிந்ததே. முருகன் சிவனாரின் நெற்றி கண்ணிலிருந்து தோன்றியவர்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருக பெருமான் ஆறு குழந்தைகளாக ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். அவர் தனது தாய் பார்வதியால் ஒரே குழந்தையாக ஆக்கப்பட்ட போது சிவன் கார்த்திகைப் பெண்டிரை நட்சத்திரமாக வானில் என்றும் திகழ அருள் பாலினார்.
கார்த்திகை அன்று முருகனை வழிபடுவது சிறப்பான ஒன்று தானே.அவரை வளர்த்தவரே கார்த்திகை பெண்கள் தானே. கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் இன்றைய தினம் களை கட்டும்.
கார்த்திகை விரதம் முருக பக்தர்களுக்கு விசேஷமான ஒன்று. பூஜை ஸ்லோகம் என கார்த்திகையை கொண்டாடுபவர் பலர். கார்த்திகை அன்று முருகனை வழிபட்டு இப்பிறவிப் பிணி தீர்ந்து நன்மை அடைவோம்.
Leave a Reply